காண முடியாது
கருப்பு நிலாவை..
கண்டுவிட்டேன் நான்
திருடி நீ அதைத் திருடி
நெற்றியில் பொட்டாக வைத்ததை...
கதிரொளி மறைவினை
கண்ணாடி அணியாமலேயே
கண்டுவிட்டேன் நான்..
திருடி நீ அதைத் திருடி
கண்ணாடி வளவியாய்
கையில் அணிந்துகொண்டதை..
தேனீக்களின் உழைப்பை
உதடுகளால் வர்ணிக்க முடியாது
அவைகள் சேர்த்த தேனை
கண்டுவிட்டேன் நான்..
திருடி நீ அதைத் திருடி
உதட்டுச் சாயமாய்
பூசிக்கொண்டதை...
இன்னும் காத்துக்கொண்டிருப்பவை
எத்தனை எத்தனையோ
உன்னிடம் திருட்டுப்போக...

