Thursday, 22 September 2011

ஜோதிடம்..


ஒரு மாலை நேரம்
அவள் இடது கைகள்
என் வலது கைகளை
பற்றின..
என்னவென்று கேட்டேன்..
ஜோதிடம்
பார்க்கிறேன் என்றாள்...!
வலது கையின்
ஆள்காட்டி விரலால்
என் கை ரேகைகளை
வருடிக்கொண்டே
கூறினாள்..
'உன்னை
அழகான பெண்ணொருத்தி
கரம் பிடிப்பாள்' என்று..
அவளுக்கு
தெரிந்திருக்கவில்லை
என் கரத்தினை
பிடித்துக்கொண்டிருந்தது
அவள் தான் என்று..!

Friday, 9 September 2011

கவிதைகள்


உந்தன்
உதடுகளில் இருந்து
மலர்ந்த
வார்த்தைப்பூக்களை
எந்தன்
நாட்குறிப்பில்
சேகரித்து வைத்தேன்.!
இன்று
அவையனைத்தும் 
அச்சிடப்படாத கவிதைகள்...!