நள்ளிரவில்
சிரித்த வண்ணமாக
பிறந்தது
இந்த சுதந்திரக் குழந்தை...!
பலகாலமாய்
விடியலைக்
காணாமல்
அழத்தொடங்கியது...
இப்போது
கொஞ்சம் கொஞ்சமாய்
அழியவும்
துணிந்துவிட்டது...
நம்முள் பாதி
அழித்துக்கொண்டிருக்கிறோம்..
இருக்கும் மீதி
வேடிக்கைதான்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்...!.
No comments:
Post a Comment